\
உலகிலேயே முதன்முதலாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண் - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்

உலகிலேயே முதன்முதலாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண் - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்

உலகிலேயே முதன்முதலாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண் - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்
Published on

70 வயதான கனடப் பெண்மணி, 'காலநிலை மாற்றத்தால்' பாதிக்கப்பட்ட முதல் நோயாளியாக கண்டறியப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த பெண்ணின் உடல்நிலை கொடிய வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டதாக, இவருக்கு சிகிச்சையளிக்கும் கூட்டேனே லேக் மருத்துவமனையின் மருத்துவர் கைல் மெரிட் தெரிவித்தார். "அந்த பெண்மணியின் உடல்நலம் முழுவதுமாக மோசமடைந்துவிட்டன, அவரது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க மிகவும் சிரமப்படுகிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் ஒருவரை எப்படி குளிர்விப்பது என்று நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது " என்று தெரிவித்தார்.

கனடாவிலும், அமெரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதிவான வெப்ப அலைகள் நூற்றுக்கணக்கான இறப்புகளுக்கு காரணமாக இருந்தன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்பம் காரணமாக இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். வானிலை ஆய்வாளர்கள் வடமேற்கில் உள்ள உயர் அழுத்தத்தின் குவியும் நிலையால் இந்த கடும் வெப்ப அலைகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர், இது மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் மோசமடைந்தது. வெப்ப அலைகள் குவியும் நிலையைத் தூண்டியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மிக அதிக வெப்பநிலை அல்லது ஈரப்பத நிலைகள் மனிதனுக்கு வெப்ப பக்கவாதம் அல்லது வெப்ப சோர்வு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. அதிகளவான நோயாளிகள் வெப்ப பக்கவாதம் மற்றும் பிற வெப்பம் தொடர்பான நோய்களுடன் வருவதால், இப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com