\
கொரோனா தடுப்பூசி பெற்ற மகிழ்ச்சியில் உறைந்த ஏரியில் நடனமாடிய கனடாக்காரர்.. வைரல் வீடியோ

கொரோனா தடுப்பூசி பெற்ற மகிழ்ச்சியில் உறைந்த ஏரியில் நடனமாடிய கனடாக்காரர்.. வைரல் வீடியோ

கொரோனா தடுப்பூசி பெற்ற மகிழ்ச்சியில் உறைந்த ஏரியில் நடனமாடிய கனடாக்காரர்.. வைரல் வீடியோ
Published on

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மகிழ்ச்சியில் கனடாவைச் சேர்ந்த ஒரு நடனக் கலைஞர் உறைந்துபோன ஏரியில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கனடா நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நாடு முழுவதும் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞரும் நடனக் கலைஞருமான குர்தீப் பாந்தர் என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதைக் கொண்டாடும் வகையில் பனியால் உறைந்துபோன ஏரி ஒன்றில், பஞ்சாபின் பாரம்பரிய நடனமான பங்க்ரா நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com