பிரேசில் ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகள் - எதிர்க்கட்சிகள் போராட்டம்

பிரேசில் ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகள் - எதிர்க்கட்சிகள் போராட்டம்
பிரேசில் ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகள் - எதிர்க்கட்சிகள் போராட்டம்

பிரேசில் ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகளை அரசாங்கமே வாங்கிக் கொடுப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பிரேசில் அரசை எதிக்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பிரேசிலில் அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரான எலியாஸ் வாஸ் என்பவர், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பிரேசில் ராணுவத்துக்கு எந்தெந்த விஷயங்களுக்காக செலவிடப்படுகிறது என அவர் கேள்வியெழுப்பி இருந்தார். இதற்கான பதில், அவருக்கு சில தினங்களுக்கு முன்பு கிடைக்கப் பெற்றது. அதில், பிரேசில் ராணுவ வீரர்களுக்கு வயாகரா மாத்திரைகள் மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கிலான பணத்தை அரசாங்கம் செலவிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த எலியாஸ் வாஸ், இந்த விவகாரத்தை ஊடகங்களில் தெரிவித்தார். இதனால் தற்போது இந்த விஷயம் பூதாகரமாகியுள்ளது. பொதுமக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளுக்கு கூட பிரேசிலில் தட்டுப்பாடு நிலவும் சூழலில், ராணுவ வீரர்களுக்கு லட்சக்கணக்கான பணத்தை செலவிட்டு வயாகராவும், செயற்கை ஆணுறுப்புகளும் வாங்குவது தேவைதானா? என எதிர்க்கட்சிகள் கேள்யெழுப்பி வருகின்றன. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்திலும் குதித்துள்ளன.

இந்த சூழலில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரேசில் ராணுவம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் ராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்கவே வயாகரா மாத்திரைகள் வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்" எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், செயற்கை ஆணுறுப்புகள் வாங்கப்பட்டது தொடர்பாக ராணுவம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com