கடந்த 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக தங்களை அறிவித்துக் கொண்டதை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளும், அரபு நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்நாடுகள் இஸ்ரேலை புறக்கணித்து வந்தன. பின்னர் 1979ஆம் ஆண்டு எகிப்தும், 1994-ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.