உண்மை காதலை தேடிய ஆஸ்திரேலியப் பெண்.. காத்திருந்த சைபர் மோசடி வலை.. ரூ.4.3 கோடியை பறிகொடுத்த சோகம்!
அன்னெட் ஃபோர்டு என்ற ஆஸ்திரேலிய பெண்ணின் 33 வருட திருமண வாழ்க்கை கடந்த 2018 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளது. திருமண வாழ்க்கையிலிருந்து தனது கணவர் எளிதாக வெளியேற, மறக்கமுடியாமல் தவித்த அன்னெட் தனது வாழ்க்கையில் மீண்டும் ஒரு காதலை தேட ஆரம்பித்தார்.
அதை தேடும்போதுதான் அவருக்கு கிடைத்தது ” Plenty of Fish" என்ற டேட்டிங் செயலி. அதில், வில்லியம் என்ற ஒரு நபருடன் பழக்கம் ஏற்படவே காலம் , நேரம் பார்க்காமல் இருவரும் நன்றாக பேச ஆரம்பித்தனர்.
இருவருக்கும் இடையேயான நட்பு நம்பிக்கை பெற்றதாகவும் இருந்தது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு, அன்னெட்டிடம் பணத்தேவை இருக்கிறது என்று கேட்ட ஆரம்பித்துள்ளார் வில்லியம் என்ற அந்த நபர். இதற்காக ஆவர் சொன்ன கதைதான், மலேசியாவில் கோலாலம்பூரில் தனது பணப்பை திருடப்பட்டதாகவும், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவையும் அதோடு திருடப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனக்கு ரூ.2,75,000 தேவை என்று கூறியுள்ளார். அன்னெட்டும் கொடுத்து உதவியுள்ளார்.
இதன்பிறகு தொடர்ந்து, பணத்தை கறக்க அவர் கையாண்டதாக கூறப்படும் மற்றொரு செயல், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவமனை செலவுகளுக்கு பணம் கொடுக்கும்படி கூறியதுதான்.
இப்படி பணத்தின் தேவை அதிகரித்து கொண்டே இருப்பதை அறிந்த அன்னெட் ஆஸ்திரேலியா கூட்டாட்சி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னதாகவே, வில்லியம்காக அன்னெட் செலவு செய்தது ரூ 1.6 கோடி.
இப்படியே நாட்கள் கடந்தன.. சரியாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அன்னெட்டிற்கு நெல்சன் என்ற மற்றொரு நபருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அறிமுகமான அந்த அடையாளம் தெரியாத நபர், federal bureau of investigation-னில் தனது நண்பர் ஒருவர் இருப்பதாகவும் அன்னெட் கொடுத்த வழக்கை விசாரிக்க $2500 அவர் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பணத்தை பறிகொடுத்ததால் சுதாரித்த கொண்ட அன்னெட், பணத்தை தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், மறுத்த நெல்சல், பணத்தை டெப்பாட்சிட் செய்யவும் பிட்காயின் ஏடிஎம் ஐ பயன்படுத்தும்படியும் வற்புறுத்தியுள்ளார்.
அன்னெட்டும் ஒப்புக்கொள்ள, ஆட்டமே அதன்பிறகுதான் ஆரம்பித்துள்ளது.
அன்னெட்டின் கூற்றுப்படி, அவருக்கு தெரியாமல் பிட்காயின் மூலம், அவரது கணக்கிலிருந்து தொடர்ந்து பணம் வெளியேறி கொண்டே இருந்துள்ளது. இதை அறிவதற்கு முன்பே , ரூ 1.5 கோடி பணம் தீர்ந்துள்ளது போயிருந்தது.
இப்படி எல்லாவற்றையும் இழந்த அன்னெட் , யாரும் இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
மனம் உடைந்த அன்னெட் வெளியிட்டுள்ள இந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.