குட்டி விமானத்தில் 500 கிலோ போதைப்பொருள் கடத்தல் : 5 பேரை கைது செய்த ஆஸ்திரேலிய போலீஸ்

குட்டி விமானத்தில் 500 கிலோ போதைப்பொருள் கடத்தல் : 5 பேரை கைது செய்த ஆஸ்திரேலிய போலீஸ்

குட்டி விமானத்தில் 500 கிலோ போதைப்பொருள் கடத்தல் : 5 பேரை கைது செய்த ஆஸ்திரேலிய போலீஸ்
Published on

கடந்த வாரத்தில் ஒருநாள் பப்புவா நியுகினியாவில் இருந்து விமான ஓடுபாதையில் இல்லாமல் சாதாரண இடத்தில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டது ஒரு குட்டி விமானம். அதில் 500 கிலோவுக்கும் அதிக  மதிப்புள்ள கொகைன் போதைப்பொருளைக் கடத்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.  

ஜூலை 26 ஆம் தேதியன்று மார்ஸ்பி துறைமுகத்தின் வடக்கில் பப்பா லியா லியா என்ற இடத்தில் இருந்து  விமானம் டேக்ஆப் ஆன சில நிமிடங்களில் போதைப்பொருள் கடத்தப்படும் செய்தியறிந்த ஆஸ்திரலிய மற்றும் பப்புவாநியுகினியா காவல்துறையினர், அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்கினர்.

பின்னர், அதில் கடத்தப்பட்ட 28 பைகளில் இருந்து 50 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருளைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். இத்தாலியச் சேர்ந்த ஒரு குற்றக்கும்பலுடன் தொடர்புடைய மெல்போர்ன் நகரை மையமாகக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு கடத்தலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.   

போதைக் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொகைன் போதைப்பொருளின் எடை காரணமாக சிறிய விமானம் தடுமாறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com