\
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் முழு ஊரடங்கு:  கொரோனா பாதிப்பு பேரிடராக அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் முழு ஊரடங்கு: கொரோனா பாதிப்பு பேரிடராக அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் முழு ஊரடங்கு: கொரோனா பாதிப்பு பேரிடராக அறிவிப்பு
Published on

ஆஸ்திரேலியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த இரண்டாவது பெரிய நகரமான விக்டோரியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. மேலும், அது பேரிடர் அவசர நிலையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பல நகரங்களில் ஊரடங்கு அமலான நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலிய அரசு கடுமையாகப் போராடிவருகிறது. கடந்த ஞாயிறன்று, விக்டோரியா நகரில் 671 பேர் தொற்றுள்ளவர்களாக புதிதாக  அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

விக்டோரியா நகரில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கும் என்ற அச்சத்தில் ஆறு வார காலத்திற்கு ஊரடங்கு அமலாகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில், அங்கு வசிக்கும் 50 லட்சம் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com