மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 தொழிலாளர்கள் பலி

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 தொழிலாளர்கள் பலி
மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 தொழிலாளர்கள் பலி

(கோப்பு புகைப்படம்)

மியான்மர் நாட்டில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு வேலைப்பார்த்து வந்த 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com