வியட்நாமின் மத்திய பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதுவரை 18 பேர் வெள்ளத்தில் மாயமாகி உள்ள நிலையில் அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதுமட்டுமின்றி 780 ஹெக்டேர் பரப்பிலான நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன.