\
குற்றவாளிகளின் கத்திகளால் உருவான தேவதை

குற்றவாளிகளின் கத்திகளால் உருவான தேவதை

குற்றவாளிகளின் கத்திகளால் உருவான தேவதை
Published on

லண்டனில் 26 அடி உயர தேவதை சிலை 1 லட்சம் கத்திகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட கத்திகள் அனைத்தும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளை சேர்ந்த போலீசாரால் வழங்கப்பட்டவை. இவை குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.
தேவதை சிலையை அல்பிராட்லி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ளார். இந்த சிலையை லண்டனில் உள்ள டிராபால்கர் சதுக்கத்தில் வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சிலை அங்கு வைக்க இங்கிலாந்து அரசு அனுமதி வழங்காமல் மறுப்பு தெரிவித்துவிட்டது. இச் சிலை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என அரசு தரப்பில் கருத்து தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com