நீண்ட போராட்டத்துக்குப் பின் கருணைக் கொலைக்கு நீதிமன்ற அனுமதி பெற்ற பெண்

நீண்ட போராட்டத்துக்குப் பின் கருணைக் கொலைக்கு நீதிமன்ற அனுமதி பெற்ற பெண்
நீண்ட போராட்டத்துக்குப் பின் கருணைக் கொலைக்கு நீதிமன்ற அனுமதி பெற்ற பெண்

பெருவில் முதன் முறையாக தீராத நோய் வாய்ப்பட்ட 44 வயது பெண் கருணைக் கொலை செய்து கொள்வதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எஸ்ட்ராடா (ESTRADA) என்ற மனநல மருத்துவர், கடந்த 30 ஆண்டுகளாக பாலிமையோஸிடிஸ் (POLYMYOSITIS) என்ற தீராத நோயால் அவதிப்பட்டு வருகிறார். சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு, செயற்கை சுவாசம் மூலம் வாழ்ந்து வரும் அவர், தனது உயிரை மாய்த்து கொள்ள அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.

சுமார் 5 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு, உயிரை மாய்த்து கொள்வதற்கு அனுமதி வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது தான் அமைதியாகவும், நிம்மதியாகவும் உணர்வதாக எஸ்ட்ராடா தெரிவித்துள்ளார். ஆனால் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கியதற்கு அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com