சீனாவை அடுத்து தென்கொரியாவிலும் வேகமெடுக்கும் கொரோனா!

சீனாவை அடுத்து தென்கொரியாவிலும் வேகமெடுக்கும் கொரோனா!
சீனாவை அடுத்து தென்கொரியாவிலும் வேகமெடுக்கும் கொரோனா!

சீனாவை அடுத்து தென் கொரியாவிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தென் கொரியாவில் ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சீனாவுக்குப் பிறகு, தென் கொரியா கொரோனாவின் அடுத்த அலையை எதிர்கொள்ள துவங்கியுள்ளது. ஒரு நாளில் உறுதி செய்யப்படும் கொரோனா தொற்றுக்களில் புதிய உச்சத்தை தொட்டுவிட்டது தென் கொரியா. இன்று 4,00,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு ஜனவரியில் நாடு தனது முதல் தொற்றை உறுதி செய்ததிலிருந்து மிக அதிகம். புதிய வழக்குகளுடன், தென் கொரியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு இப்போது 76,29,275 ஆக உயர்ந்துள்ளது என்று கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (கேடிசிஏ) மேற்கோளிட்டுள்ளது.

செவ்வாயன்று, தென் கொரியாவில் 24 மணி நேரத்தில் 293 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நாளை தொற்றுநோயின் மிகக் கொடிய நாள் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனா அதன் மோசமான கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது, இதனால் மில்லியன் கணக்கானவர்கள் மீண்டும் லாக் டவுன் நிலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கொரோனா தொற்றின் திடீர் அதிகரிப்பு தெற்கு தொழில்நுட்ப மையமான ஷென்செனில் சுமார் 17.5 மில்லியன் குடியிருப்பாளர்களை முடக்கியுள்ளது. மேலும், ஷாங்காய் மற்றும் பிற நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், எண்ணெய் விலைகள் மற்றும் பலவீனமான நுகர்வோர் தேவை ஆகியவற்றால் உலகப் பொருளாதாரம் கடுமையான அழுத்தத்தின் கீழ் இருக்கும் நேரத்தில் இந்த கட்டுப்பாடுகள் வந்துள்ளன. மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் வைரஸின் ஸ்டெல்த் மாறுபாடு சீனா மற்றும் தென் கொரியாவில் வழக்குகளின் அதிவேக எழுச்சிக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com