ஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு
ஆப்கான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. 

ஹஸ்கா மினா மாகாணம் ஜலாலாபாத்தில் உள்ள பள்ளிவாசலில் 300-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ‌ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பள்ளிவாசலின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் வெடித்து‌ச் சிதறியது. இதில், 62 பேர் கொல்லப்பட்டனர்.

10-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ‌சிலர‌து நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ‌உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com