afghanistan earthquake killed over 2200 people
afganreuters

ஆப்கன் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 2,200 ஆக அதிகரிப்பு.. மீட்புப் பணியில் சிக்கல்!

ஆப்கானிஸ்தானில் கடந்தவார இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரித்துள்ளது.
Published on

ஆப்கானிஸ்தானில் கடந்தவார இறுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள குனார் பகுதியே மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6ஆக பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக 2,205 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,640க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் இடிபாடுகளில் இருந்து மேலும் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் தொடர்ந்து பாறைகள் உருண்டுவிழுந்த வண்ணம் இருப்பதால் மீட்புப் பணிகளில் சிக்கல் நிலவுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு உதவ பல்வேறு நாடுகளும் உதவிப் பொருள்களை அனுப்பி வருகின்றன. இருப்பினும், நர்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பிடமின்றி திறந்தவெளியில் திகைத்து நிற்கின்றனர்.

afghanistan earthquake killed over 2200 people
afgan earthquakex page

மறுபுறம், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (செப்.4) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31க்குப் பிறகு, அதே பகுதியில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். செப்டம்பர் 2ஆம் தேதி, 5.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, மீட்புப் பணிகளுக்கு இடையூறு விளைவித்தது. எனினும், குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் கிராமங்களை தரைமட்டமாக்கிய முந்தைய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, 10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பல்லாயிரக்கணக்கானவர்களை வீடற்றவர்களாகவும், 3,600 க்கும் மேற்பட்ட மக்களைக் காயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6,700க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

afghanistan earthquake killed over 2200 people
Afg | "சாப்பிட எதுவுமில்லை, தங்குவதற்கும் இடமில்லை" 1400 உயிர்களைப் பறித்த நிலநடுக்கம்..

’84,000 பேர் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்’ என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான இஸ்லாமிய நிவாரண உலகளாவிய மதிப்பீட்டின்படி, குனார் மாகாணத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சில கிராமங்களில், மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 98% கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன.

ஆப்கானிஸ்தான், குறிப்பாக இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இந்து குஷ் மலைத்தொடரில், கடுமையான நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. போர், வறுமை மற்றும் சுருங்கி வரும் உதவிகளால் நசுக்கப்பட்ட 42 மில்லியன் மக்களைக் கொண்ட தெற்காசிய நாட்டில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான வளங்கள் குறைவாகவே உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளிநாட்டு உதவிகளுக்கான நிதியைக் குறைத்ததும், பெண்கள் மீதான தாலிபானின் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மற்றும் உதவிப் பணியாளர்கள் மீதான அதன் கட்டுப்பாடுகள் மீதான நன்கொடையாளர்களின் விரக்தியும் ஆப்கானிஸ்தானின் தனிமையை மோசமாக்கியுள்ளன.

afghanistan earthquake killed over 2200 people
நிலநடுக்கம்| 800 பேர் உயிரிழப்பு.. 2,500 பேர் படுகாயம்! உருக்குலைந்த ஆப்கானிஸ்தான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com