ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் உள்நாடு, வெளிநாடு என ஆப்கான் நாட்டில் உள்ள மக்கள் அங்கிருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு விமானம் ஏறி தப்பி வருகின்றனர். அப்படி தப்பியவர்களில் ஆப்கன் நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் ஒருவர்.
அமெரிக்காவின் C-17 விமானத்தில் அவர் ஆப்கன் நாட்டிலிருந்து தப்பிக்கும் நோக்கில் பயணித்துள்ளார். அந்த பயணத்தின் போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து விமான தளபதி விமானத்தை தாழ்வாக பறக்க செய்துள்ளார். அதன் மூலம் விமானத்தினுள் காற்றின் அழுத்தத்தை அதிகரிக்க செய்து அந்த பெண்ணை காத்துள்ளார்.
அந்த விமானம் ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டுள்ளது. அவருக்கு அவசர கால மருத்துவ ஊழியர்கள் உதவ விமானத்தினுள் உள்ள சரக்கு பெட்டகம் வைக்கப்படும் பேவில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.