சீனாவில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டா கரடி ஒன்று குட்டிக்கரணம் அடிக்கும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
மெங் மெங் என்று பெயர் கொண்ட அந்த பாண்டா கரடி தெற்மேற்கு சீனாவில் உள்ள வனவிலங்குகள் ஆராய்ச்சிப் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாண்டா கரடி எப்போதும் தனது கூண்டில் சோம்பேறித்தனமாகத்தான் அமர்ந்திருக்கும். தற்போது சுறுசுறுப்பாக அது குட்டிக்கரணம் அடிக்க ஆரம்பித்துள்ளது. இதைப் பார்த்த சிலர் அதை வீடியோவாக்கி சமூகவலைத்தளங்களில் வைரலாக்கியுள்ளனர். மெங் மெங் பாண்டாவின் இந்த செயல் அதன் பராமரிப்பாளருக்கு பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது.