இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைதா?

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைதா?
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - அமைச்சர் ரிஷாத்தின் சகோதரர் கைதா?

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 500க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். மேற்கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது, ராணுவ உளவுத்துறை அளித்த தகவலின்படி ரிஷாத்தின் சகோதரரை பிடித்து ராணுவ அதிகாரிகள் இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், இலங்கை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். வாக்குமூலம் பெற்றுக் கொண்டு அவரை வவுனியா போலீசார் விடுவித்தனர்.

தம்முடைய சகோதரர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலை அமைச்சர் ரிஷாத் மறுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com