மாலி: ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை ஈன்றெடுத்த பெண்!

மாலி: ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை ஈன்றெடுத்த பெண்!
மாலி: ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை ஈன்றெடுத்த பெண்!

மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மாலி குடியரசு நாட்டை சேர்ந்தவர் 25 வயதான ஹலிமா சிஸ். இவர் வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள மொரோக்கோவில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார். சிசேரியன் முறையில் அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. மொத்தம் 5 பெண் மற்றும் 4 ஆண் என் ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளனர். அவரது உடல் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் மாலி அரசு அவருக்கு மொரோக்கோ நாட்டு மருத்துவர்கள் உடன் இணைந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். 

அவர் கருவுற்ற பின் பரிசோதனைக்கு மருத்துவர்களை நாடி உள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்ததில் அவருக்கு 9 குழந்தைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அதனால் அவருக்கு சிறப்பு கவனம் செலுத்தி கவனித்து வந்துள்ளனர். முதலில் மாலியின் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவரை கவனித்து வந்த மருத்துவர்கள் பின்னர் மொரோக்கோவிற்கு பிரசாவத்திற்காக கொண்டு சென்றுள்ளனர். சில வாரங்களுக்கு பின்னர் தாயும், சேய்களும் மாலிக்கு திரும்புவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. 

மிகவும் அரிதினும் அரிதாக தான் இந்த மாதிரியான பிரசவங்கள் நடைபெறுகிறது. இப்படி பிறக்கின்ற குழந்தைகள் சர்வைவ் ஆவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அது கவலை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com