“நான் கருவுற்றிருந்ததே எனக்கு தெரியாது!” - கழிவறையில் குழந்தையை ஈன்றெடுத்த அமெரிக்க பெண்

“நான் கருவுற்றிருந்ததே எனக்கு தெரியாது!” - கழிவறையில் குழந்தையை ஈன்றெடுத்த அமெரிக்க பெண்
“நான் கருவுற்றிருந்ததே எனக்கு தெரியாது!” - கழிவறையில் குழந்தையை ஈன்றெடுத்த அமெரிக்க பெண்

“நான் கருவுற்றிருந்தேன் என எனக்கு தெரியாது!” - அமெரிக்காவில் கழிவறையில் குழந்தையை ஈன்றெடுத்த பெண்

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் மெலிசா சர்ஜ்காஃப். அங்கு தனது இணையருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று தீவிர வயிற்று வலியால் அவர் துடித்துள்ளார். என்ன செய்வதென்று புரியாத நிலையில் அவரது இணையர் மருத்துவ உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் கழிவறைக்கு சென்ற  மெலிசா ஒரு அழகான குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ தன்னுடைய கிட்னியில் இருந்து ஏதோ கல் வெளியேறுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உயிருள்ள ஒரு குழந்தை அவருக்கு பிறந்திருக்கிறது.

இந்த நிகழ்வை அவரே அதிர்ச்சியும், ஆச்சர்யமும், ஆனந்தமும் கலந்த உணர்வுடன் பகிர்ந்து கொண்டார். “நான் கருவுற்றிருந்தேன் என எனக்கு தெரியாது. அன்று அதிகாலை எனக்கு அதிதீவிர வயிற்று வலி இருந்தது. ஒரு கட்டத்தில் என்னால் முடியாமல் கழிவறைக்குள் சென்று விட்டேன். அப்போது ஏதோ ஒன்று எனது வயிற்றில் இருந்து வெளியேறுவது போல இருந்தது. முதலில் நான் எனது உடலின் உறுப்பு தான் வெளியேறுகிறது என் எண்ணி அஞ்சினேன். அதாவது கிட்னியில் இருந்து கல் வெளியேறுகிறது, அதனால் தான் இத்தனை வலி இருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தேன்.

முழுவதும் ரத்தத்துடன் இருந்ததால் முதலில் என்னால் அடையாளம் காணவே முடியவில்லை. சில நொடிகளுக்கு பிறகு தான் அதனை தொட்டு பார்த்தேன். அப்போதுதான் அது ஒரு அழகான குழந்தை என எனக்கு தெரியவந்தது. அதன் வயிற்றுப்பகுதியில் மூச்சு இழுத்து வாங்குவது நன்றாகவே தெரிந்தது. முதலில் குழந்தையை எடுத்து எனது இதயத்திற்கு நெருக்கமாக வைத்துக் கொண்டேன். அந்த குழந்தையின் சூடு எனக்கு நன்றாகவே தெரிந்தது. குழந்தை மீது இருந்த ரத்தத்தை ஒரு துணியால் துடைத்தோம். பின்னர் மருத்துவர்களிடம் ஒப்படைத்தோம். குழந்தை தற்போது நன்றாக இருக்கிறது. இது எனக்கே சர்பிரைஸ் தான்” என அவர் தெரிவித்துள்ளார். 

அவரது குழந்தை 9 மாதத்தில் பிறந்துள்ளது. அவருக்கு வயிறும் பெரிதாகதாதல் கருவுற்றிருக்கும் விவகாரம் தெரியாமல் போயுள்ளது. அத்துடன், கருவுற்றிருந்ததற்கான பல்வேறு சமிக்கைகள் அவருக்கு வந்துள்ளது. ஆனால், அதனை அவரால் உணர்ந்து கொள்ளவே முடியவில்லை. ஏதோ வயிற்றில் வேறு பிரச்னை என நினைத்துக் கொண்டிருந்தார். அந்த குழந்தைக்கு லியாம் என்று பெயர் வைத்துள்ளனர் அந்த தம்பதி. 

இதில் இருக்கும் முக்கியமான கேள்வி என்ன வென்றால், ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டால் அவருக்கு ப்ரீயட் (மாதவிடாய்) நின்றுவிடும். அதாவது மாதந்தோறும் வரும் ரத்தப்போக்கு நின்றுவிடும். ஆனால், சிலருக்கு கர்ப்பம் தரித்த பிறகும் லேசான ரத்தப் போக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். இது மிகவும் அரிதான சிலருக்கு தான் இருக்கும். அப்படித்தான் இந்தப் பெண்மணி தனக்கு சீரற்ற மாதவிடாய் இருந்து வந்துள்ளாதாக நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார். எப்படியே எதிர்பாராத விதமாக அவருக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com