கள்ளச்சந்தையில் ஏவுகணை விற்க முயற்சி: பின்புலத்தில் வடகொரியா?

கள்ளச்சந்தையில் ஏவுகணை விற்க முயற்சி: பின்புலத்தில் வடகொரியா?

கள்ளச்சந்தையில் ஏவுகணை விற்க முயற்சி: பின்புலத்தில் வடகொரியா?
Published on

ஆஸ்திரேலியாவில் கள்ளச்சந்தையின் மூலம் ஏவுகணையை விற்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் ஏவுகணை பாகங்களை விற்பது, அபாயகராமன ஆயுதங்களை தயாரிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பல்வேறு நாடுகளும் வடகொரியா மீது சுமத்தியுள்ளன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு முன்னனி நாடுகள் அதன்மீது பொருளாதாரத்தடை விதித்துள்ளது.

இந்நிலையில் கள்ளச்சந்தையில் ஏவுகணை பாகங்களை விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மீது மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆயுதங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வடகொரியாவின் தலைமையை ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் இந்த குற்றத்திற்கு வடகோரியா தான் பின்புலம் என்றும் ஆஸ்திரேலியா குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com