திடீரென வானிலிருந்து கீழே விழுந்த தீப்பந்து! வெளியான பரபரப்பு வீடியோ காட்சிகள்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில், எரிகல் போன்ற நெருப்பு பந்து ஒன்று வானத்திலிருந்து பூமியில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் விமான நிலையத்தில், ஒரு நம்பமுடியாத காட்சி பதிவானது.

கடந்த சனிக்கிழமை அன்று, கெய்ர்ன்ஸ் விமான நிலையம் அருகே தீப்பந்து போன்ற ஒன்று வானத்தில் இருந்து கீழேவிழுந்து தரையை தாக்கியது. இந்த அரிதான நிகழ்வு, விமான நிலையத்தின் கார் பார்க்கிங் கேமராவில் பதிவாகியுள்ளது. இரவு 9.22 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், அதனை சுற்றியுள்ள பலபகுதிகளிலும் அதன் வெளிச்சம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரவை பகலாக மாற்றிய இந்த தீப்பந்தானது விண்கல்லாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com