செனகல்: மருத்துவமனையில் தீ விபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

செனகல்: மருத்துவமனையில் தீ விபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
செனகல்: மருத்துவமனையில் தீ விபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

செனகல்  நாட்டில் உள்ள மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில், 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேற்கு டிவௌவான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி உள்ளனர். இருப்பினும் அங்கிருந்த 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அதிபர் மேக்கி சால் வருத்தம் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. கடந்த ஆண்டு இதே போல பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர்.

இதையும் படிக்கலாம்: அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு: அதிரடி நடவடிக்கைக்கு தயாரான அதிபர் ஜோ பைடன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com