ரஷ்யா உக்ரைன் இடையே மலர்ந்த காதல் கதை.! திருமணம் நடந்தது எந்த நாட்டில் தெரியுமா?

ரஷ்யா உக்ரைன் இடையே மலர்ந்த காதல் கதை.! திருமணம் நடந்தது எந்த நாட்டில் தெரியுமா?
ரஷ்யா உக்ரைன் இடையே மலர்ந்த காதல் கதை.! திருமணம் நடந்தது எந்த நாட்டில் தெரியுமா?

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தீவிரமாய் நடந்து வரும் நிலையில் இரு நாட்டை சேர்ந்த இருவருக்குள் காதல் நிகழ்ந்துள்ளது. இந்த ஜோடி தற்போது இந்தியாவில் பதிவு திருமணம் செய்துள்ளது.

உக்ரைனில் வசித்து வரும் ரஷ்ய நாட்டை சேர்ந்த செர்ஜி நோவிகோவ் என்பவர், காதலித்து வந்த தனது உக்ரைன் காதலியான எலோனா பிரமோகாவை இந்தியாவில் இமாச்சல் பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்து பாரம்பரிய முறைப்படி கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தற்போது தங்களது திருமணத்தை அந்த காதல் ஜோடி பதிவு
செய்துள்ளனர்.

பதிவு திருமணத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காதல் ஜோடி, அனைவரும் சண்டையிடாமல் அன்பு செய்யவேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com