8 மாடி கட்டடத்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு

8 மாடி கட்டடத்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு
8 மாடி கட்டடத்தில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு

பாரீஸ் நகரில் 8 மாடி கட்டடம் ஒன்றின் 7வது மற்றும் 8வது தளங்கள் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 8 அடுக்கு கட்டடம் ஒன்றின் 7வது மற்றும் 8வது தளங்களில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி 5 மணிநேரத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 தீயணைப்பு வீரர்கள் உள்பட 30 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்த விபத்துகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பெண் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்பின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என அதிகாரிகள தகவல் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com