அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை இறந்தவர்கள் எத்தனை பேர்?

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை இறந்தவர்கள் எத்தனை பேர்?
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை இறந்தவர்கள் எத்தனை பேர்?

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனாலும் லாஸ்வேகாஸில் இப்போது நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூடுதான் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் மொத்தம் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆர்லாண்டோவில் இரவு விடுதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரி‌‌ழந்திருக்கின்றனர். விர்ஜினியாவில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேரும், 2012 ஆம் ஆண்டில் சாண்டி ஹுக் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் 1991 ஆம் ஆண்டு டெக்சாஸ் விடுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேரும், 1984 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் மெக்டொனால்டு விடுதிக்குள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர். முதன் முதலாக 1966 ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்துக்குள் தான் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அப்போது 16 பேர் உயிரிழந்‌தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com