இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-க்கான நோபல் பரிசு அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இலக்கியத்திற்கான நோபல் பரிசினை அறிவித்திருக்கிறது தேர்வுக்குழு.
மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளில் தலா மூன்று பேருக்கும், வேதியியல் துறையில் இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.