சிலியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

சிலியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
சிலியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து


சிலியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து கருகின. கடலோர நகரமான வால்ப்பரைசோ நகரிலுள்‌ள குடிசை‌கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில் 245 வீடுகள் சேதமடைந்தன.

அப்பகுதியை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள்‌ உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். வால்ப்பரைசோவுக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாகவும், காற்றின் வேகத்தால் அருகிலிருந்த குடிசை வீடுகளுக்கு தீ பரவியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்குவந்த ஒன்பது தீயணைப்பு வீரர்கள் குழு, ஹெலிகாப்டர் உதவியுடன் பல மணி நேரப் போராட்டத்திற்குப்‌ பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீக்கு 132 ஹெக்டேர் வனப்‌பகுதிகள் இதுவரை நாசமா‌னது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com