மூழ்கிய கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உட்பட 9 பேர் மீட்பு

மூழ்கிய கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உட்பட 9 பேர் மீட்பு
மூழ்கிய கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உட்பட 9 பேர் மீட்பு

காஸ்பியன் கடலில் மூழ்கிய ஈரான் சரக்கு கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உள்பட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஈரானின் அன்ஸாலி துறைமுகத்தில் இருந்து ரஷ்யாவின் மகாசக்லாவுக்கு டைல்ஸ் ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. காஸ்பியன் கடல் பகுதியில், அஸெர்பைஜானின் லங்கரன் துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்த போது கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது. 

இதையடுத்து கப்பல் மூழ்கத் தொடங்கியது. கப்பலில் இருந்தவர்கள் தங்களை மீட்குமாறு அஸெர்பைஜான் மரைன் அகாட மிக்குத் தகவல் தெரிவித்தனர். மீட்பு பணிக்காக 2 ஹெலிகாப்டரும் ஒரு ரோந்து கப்பலும் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது. மூழ்கும் கப்பலில் இருந்த 2 இந்தியர்கள் உட்பட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

‘’அஸெர்பைஜானில் உள்ள அஸ்தாரா துறைமுகத்தில் இருந்து 37 கி.மீட்டர் தூரத்தில் கப்பல் முழுவதுமாக மூழ்கிவிட்டது’’ என்று அஸெர்பைஜான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com