பாதிக்கப்பட்டவரை, பாலியல் குற்றவாளியே திருமணம் செய்தால் தண்டனை இல்லை: 19 நாடுகளில் சட்டம்

பாதிக்கப்பட்டவரை, பாலியல் குற்றவாளியே திருமணம் செய்தால் தண்டனை இல்லை: 19 நாடுகளில் சட்டம்
பாதிக்கப்பட்டவரை, பாலியல் குற்றவாளியே திருமணம் செய்தால் தண்டனை இல்லை: 19 நாடுகளில் சட்டம்

தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியே, பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்துகொள்ள 19 நாடுகள் அனுமதிக்கின்றன என  ஐ.நா.வின் ஆண்டு அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

.நாவின் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி (யு.என்.எஃப்.பி.) அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு ஆண்டு அறிக்கையில், உலகிலுள்ள 19 நாடுகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்பிக்க செய்வதற்காக,  பாதிக்கப்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கின்றன என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது.

அல்ஜீரியா, அங்கோலா, பஹ்ரைன், பொலிவியா, கேமரூன், டொமினிகன் குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஈராக், குவைத், லிபியா, பிலிப்பைன்ஸ், ரஷ்ய கூட்டமைப்பு, செர்பியா, சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, டோங்கா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் அடங்கும்.

"இந்த நாடுகளின் சட்டங்கள் குற்றத்தின் சுமையை பாதிக்கப்பட்டவருக்கு மாற்றி, குற்றவியல் சூழ்நிலையைத் தூய்மைப்படுத்த முயற்சி செய்கின்றன" என ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நடாலியா கனெம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “இது முற்றிலும் தவறான ஒன்று. பெண்களை கீழ்படிய வைக்கும் ஒரு செயலாக அமையும்” என்றார். 

மேலும் இது குறித்து MENA அமைப்பின் பிரதிநிதி திமா டப்பாஸ் கூறுகையில், “இத்தகைய சட்டங்கள் அந்த நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. அதாவது பெண்ணின் உடல் தன்னிச்சையானது அல்ல என்ற எண்ணம் அந்த கலாசாரத்தில் உள்ளது. பெண்களை குடும்பத்தின் ஒரு சொத்தாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இந்த சட்டங்களை மாற்றுவது மிகவும் கடினமானது. முடியாததும் கூட” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com