சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 13 இலங்கை தமிழர்கள் கைது

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 13 இலங்கை தமிழர்கள் கைது
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 13 இலங்கை தமிழர்கள் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 13 தமிழர்களை பருத்தித்துறை போலீசாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் இருந்த கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா செல்ல தயாராக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்கிடமான வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டது.அப்போது இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 13 பேர் குறித்த வீட்டில் தங்யிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பருத்தித்துறை பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com