சீனாவின் புகழ்மிக்க டிராகன் படகுப் போட்டி கனடாவில் நடைபெற்றது.
கனடாவின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியினை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். வழக்கமாக நீரில் நடத்தப்படும் படகுப்போட்டி இங்கு புதுமையாக உறைந்து போன ஏரியில் நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் 100 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்.
உறைந்த பனியில் படகினை செலுத்தி உற்சாகமாக போட்டியாளர்கள் பங்கேற்றனர். 2022 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆதிக்கம் செலுத்த கனடா திட்டமிட்டிருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.