ஆன்லைன் வகுப்பின்போது மாணவி வீட்டில் நடந்த கொலை: அமெரிக்காவில் பரபரப்பு !

ஆன்லைன் வகுப்பின்போது மாணவி வீட்டில் நடந்த கொலை: அமெரிக்காவில் பரபரப்பு !
ஆன்லைன் வகுப்பின்போது மாணவி வீட்டில் நடந்த கொலை: அமெரிக்காவில் பரபரப்பு !

அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்பின்போது மாணவி வீட்டில் கொலை நடந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இண்டியன்டவுன் பகுதியில் 10 வயதுச் சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் பங்கெடுத்து வந்தார். அப்போது அந்தச் சிறுமியின் வீ்ட்டில் ஏதோ அசம்பாவிதச் சம்பவம் நேரப்போவதை உணர்ந்த ஆசிரியர் உடனடியாக அந்தச் சிறுமியின் வீடியோவை மட்டும் மியூட் செய்துள்ளார். பின்புதான் தெரிந்தது, அந்தச் சிறுமியின் தாயார் அவருடைய முன்னாள் காதலரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்பு நடந்துக்கொண்டிருந்தபோது சிறுமியின் தாய் மரிபெல் ரொசாடோ மொரல்ஸ்க்கும், டொனால்ட் வில்லியம்ஸ் என்கிற முன்னாள் காதலருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துக்கொண்டு இருந்தது. அப்போது வில்லியம்ஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட்டுள்ளார். இதில் மொரல்ஸ் காயமடைந்தார். துப்பாக்கியின் குண்டுகள் சிறுமி ஆன்லைன் வகுப்பாக பயன்படுத்தம் கணினியையும் சேதப்படுத்தியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மொரல்ஸ் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய வில்லியம்சை போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com