“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்

“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்
“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்

தவறான புரிதலால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வங்கதேச உள்துறை அமைச்சர் அசதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதியில் உள்ள பத்மா நதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். உடனே வங்கதேச எல்லைக்குள் சென்றுவிட்டதாக அந்நாட்டு எல்லை பாதுகாப்புப்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

பின்னர் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படையி‌ர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த வங்கதேச வீரர்கள் 4 பேர், இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் விஜய் பன் சிங் என்ற வீரர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசதுஸ்மான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாதுகாப்புப் படைக்கு ஏற்பட்ட தவறான புரிதலால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தவிர்க்கப்படும். தேவைப்பட்டால் இந்த விவகாரம் தொடர்பான நான் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் பேசுவேன். அத்துடன் கைதான இந்திய மீன்வர் விடுவிக்கப்படுவார்.” எனத் தெரிவித்தார். 

முன்னதாக தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வங்கதேசம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே வங்கதேச எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக, மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளிடம், எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். வங்கதேச பாதுகாப்புப் படை துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com