“பிக் பாஸ் உடன் சந்திப்பு” கெயில் பதிவால் ட்ரோல் ஆன விஜய் மல்லையா

“பிக் பாஸ் உடன் சந்திப்பு” கெயில் பதிவால் ட்ரோல் ஆன விஜய் மல்லையா

“பிக் பாஸ் உடன் சந்திப்பு” கெயில் பதிவால் ட்ரோல் ஆன விஜய் மல்லையா
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் ட்விட்டர் பதிவால், தொழிலதிபர் விஜய் மல்லையா ட்ரோல் செய்யப்பட்டார்.

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்த விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிரிட்டன் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது. இருப்பினும், மல்லையா தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என லண்டன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் மல்லையாவுடன் சேர்ந்து உள்ள படம் ஒன்றினை கிறிஸ் கெயில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், ‘பிக் பாஸ் உடன் சிறந்த சந்திப்பு’ என்று அந்த பதிவில் கெயில் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் கெயில் விளையாடிய ராயல் சேலஞ்சர் அணியின் உரிமையாளர்  விஜய் மல்லையா. இந்த ட்விட்டர் பதிவில் மல்லையாவை விமர்சனம் செய்து பலரும் கமெண்ட் செய்தனர். 

கெயில் ட்விட்டர் பதிவை அடுத்து தன்னை பலரும் ட்ரோல் செய்ததால் விஜய் மல்லையா கடுப்பானார். கெயில் பதிவினை டேக் செய்து, “எனது அருமை நண்பர் யுனிவர்சல் பாஸ் உடன் சிறந்த சந்திப்பு. என்னை திருடன் என்று விமர்சிக்கும் எல்லோரும், நான் கொடுக்க வேண்டிய முழுப் பணத்தையும் தர கடந்த ஓராண்டாக தயாரக இருக்கிறேன். அதனை உங்கள் வங்கியை பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். அப்புறம் முடிவு செய்யுங்கள் யார் திருடன் என்று” என மல்லையா காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com