தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாகிஸ்தான முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் பேசும் முஷாரப், தனக்கு ஆதரவளித்ததற்காக பாகிஸ்தான் ராணுவத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நீதிமன்ற விசாரணையின்போது தமது வழக்கறிஞருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தான் திரும்புவது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. தனது ஆட்சிக் காலத்தின்போது அவசர நிலையைப் பிறப்பித்ததற்காக முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. உடல் நலக் குறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் முஷாரப் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.