இந்திய பிரதமர் மோடியை விட, தகுதியான உடல் நலத்துடன் இருக்கிறேன் என்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் தெரிவித்துள்ளான்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், ஜெய்ஷ் இ முகமது நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 40 சிஆர்பி எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தா னுக்குள் நுழைந்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீது குண்டு வீசி தாக்கியது. இதில் 250-க்கும் அதிமானோர் பலியாகிவிட்டதாகவும் பயங்கர வாதி மசூத் அசார் படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமதுவின் பத்திரிகையான ’அல் கலாமி’ல் சாதி என்ற புனைப்பெயரில் எழுதியுள்ள மசூத் அசார், ஜெஷ்ய் இ முக மது முகாம் தாக்கப்பட்டதாகவும் பலர் பலியானதாகவும் எனது உடல்நிலை பற்றியும் தவறானத் தகவலைப் பரப்புவதாகவும் அதில் உண்மை எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளான். ‘எல்லோரும் நலம். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது’ என்று கூறியுள்ள அசார், ’அடில் அகமது தர் (புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை பயங்கரவாதி) போன்ற காஷ்மீரிகளால் ஏற்றப்பட்ட தீ, இனி அணையாது’ என்று தெரிவித்துள்ளான்.
காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் அல்ல என்றும் அது சுதந்தரப் போராட்டம் எனவும் குறிப்பிட்டுள்ள மசூத் அசார், இனி அது மாநிலம் முழுவ தும் வேகமாக பரவும் என்று தெரிவித்துள்ளான்.
தனது உடல்நலம் பற்றி பேசுவதை விரும்பாவிட்டாலும் அதற்கு எதிரான பிரசாரம் நடந்துவருவதால் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அசார், தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளான்.
‘நான் முழு நலத்துடன் இருக்கிறேன். என் சிறுநீரகமும் கல்லீரலும் மிகவும் சரியாகவே இருக்கிறது’ என்று தெரிவித்துள்ள அவன், கடந்த 17 வருடங்களாக மருத்துவமனைக்கே சென்றதில்லை என்றும் பல வருடங்களாக மருத்துவர்களை ஆலோசிக்கவே இல்லை என்றும் தெரிவித் துள்ளான்.
’’மோடியை விட நலமாகவே இருக்கிறேன். வில்வித்தையோ, துப்பாக்கிச்சுடும் போட்டியோ வைத்தால், அவரைவிட மிகவும் உடல்நலத்துடன் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்’’ என்றும் சவால் விடுத்துள்ளான்.