சென்னை: பேருந்தை இயக்காதது குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது தாக்குதல்

சென்னை: பேருந்தை இயக்காதது குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது தாக்குதல்
சென்னை: பேருந்தை இயக்காதது குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது தாக்குதல்

பேருந்தை தாமதமாக இயக்கியது குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை ஓட்டுநர் தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த முருகம்மா என்பவர், பாரிமுனை செல்வதற்காக கணவருடன் அதிகாலை பேருந்து பணிமனைக்கு சென்றுள்ளார். வழித்தடம் 102 P எண் கொண்ட பேருந்தை உரிய நேரத்தில் இயக்காத ஓட்டுநர் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முருகம்மா கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், அப்பெண் மீதும், அவரின் கணவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அப்பெண் அங்கேயே மயங்கி விழுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பெரும்பாக்கம் பேருந்து பணிமனையில் இருந்து 60க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காலை 8 மணி வரை மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியினர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com