கடலூர்: திருவந்திபுரம் கோயிலுக்கு வெளியே சாலையில் நூற்றுக்கணக்கான திருமணங்கள்

கடலூர்: திருவந்திபுரம் கோயிலுக்கு வெளியே சாலையில் நூற்றுக்கணக்கான திருமணங்கள்
கடலூர்: திருவந்திபுரம் கோயிலுக்கு வெளியே சாலையில் நூற்றுக்கணக்கான திருமணங்கள்

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயிலில் குழந்தை திருமணங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் கிராம மக்கள், தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

முறையான சான்றிதழ் கொடுத்து பதிவு செய்தால் மட்டுமே, அங்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படும். ஆனால் தற்போது கோயிலுக்குள் திருமணங்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தினால் வெளியே சாலையில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் எந்தவிதமான பதிவுகளும் இல்லாமல் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆயிரக்கணக்கானோர் குவிந்து அந்த இடமே திருவிழாக்கோலம் போல் இருப்பதால், கூட்டத்தில் குழந்தை திருமணங்கள் கூட நடைபெற வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே கோயிலுக்கு வெளியே நடைபெறும் திருமணங்களையும் முறையாக சான்றிதழ் சரிபார்த்து அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com