"எம்.ஜி.ஆர், கோபால்சாமி, சம்பத் போன்ற துரோகிகளை பார்த்துவிட்டோம்" - துரைமுருகன் பேச்சு

"எம்.ஜி.ஆர், கோபால்சாமி, சம்பத் போன்ற துரோகிகளை பார்த்துவிட்டோம்" - துரைமுருகன் பேச்சு
"எம்.ஜி.ஆர், கோபால்சாமி, சம்பத் போன்ற துரோகிகளை பார்த்துவிட்டோம்" - துரைமுருகன் பேச்சு

எம்.ஜி.ஆர், கோபால்சாமி, சம்பத் போன்ற துரோகிகளை பார்த்துவிட்டோம் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ''கட்டுப்பாடுடன் இருந்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும்'' என திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ''எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன்பின் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்துள்ளோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். ஆகையினால் கட்டுப்பாடோடு இருங்கள். நம்மை யாரும் வெற்றி பெற்றிட முடியாது. வேட்பாளரை முகத்தை உற்றுப் பார்த்தால், அவர் முகத்தில் ஸ்டாலின், கலைஞருடைய முகம் தெரியும். எனவே, அண்ணாவின் முகம் தெரியும்.

நீங்கள் அனைவருமே ஒற்றுமையோடு இருந்து தேர்தலில் பணியாற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கூட்டுறவு சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தற்போது தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மூன்று நாட்களில் அந்த தலைவர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதியதாக சங்கத் தேர்தல் நடைபெறும். அதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் சீட் கிடைக்காத அனைவருக்கும் வாய்ப்பளித்து தரப்படும்'' என துரைமுருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com