தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கோயிலில் திருமணம்?- மாங்கல்யத்துடன் சிறுவன் இருக்கும் வீடியோ வெளியீடு

குழந்தை திருமணம் நடைபெறவில்லை என்றும் பொய்யான வழக்குப் பதிவு செய்து தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஆளுநர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில், தற்போது வீடியோ ஒன்று வெளியாகிவுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பலர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், திருமணம் நடைபெற்றதாக

கூறப்பட்ட குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், திருமணம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகிவுள்ளது.

அதில், திருமணக் கூடத்தில் கையில் மாங்கல்யத்துடன் சிறுவன் ஒருவர் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முன்னதாக இதேப் போன்று, குழந்தை திருமணம் நடைபெற்ற போது எடுக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com