நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவில் 11 பேர், திமுகவில் 5 பேர், பாமக சார்பில் ஒருவர் வெற்றி பெற்றனர். இதில் ஆறாவது வார்டு உறுப்பினராகவும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவராகவும் பதவி வகித்த அதிமுகவை சேர்ந்த பி.ஆர்.சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாக இருந்த ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த துரைசாமி வெற்றி பெற்றார்.