தூத்துக்குடி: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

தூத்துக்குடி: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
தூத்துக்குடி: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி டுவிபுரம் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார். அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் மற்றும் தற்போது அதிமுக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளராகவும் உள்ளார். இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு இருசக்கர வானத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் அதே தெருவில் உள்ள இவரது சகோதரர் ராமசாமியின் மகன் லட்சுமணன் என்பவரின் வீட்டிலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் மேல்பட்டு லேசாக தீப்பற்றி எரிந்துள்ளது, வீட்டில் வெளியே கையெறி குண்டின் ஜன்னல் திரிகள் சிதறிக் கிடந்துள்ளன. இரவு நேரம் என்பதால் இது குறித்து அப்பகுதியில் யாருக்கும் தெரியவில்லை.

இதையடுத்து காலையில் இது குறித்து தகவல் வெளியானதும் சம்பவ இடத்திற்கு மத்திய பாகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதோடு இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை வீசி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, இது குறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com