ஆகஸ்ட் 31ம் தேதி கூடுகிறது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்

ஆகஸ்ட் 31ம் தேதி கூடுகிறது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்
ஆகஸ்ட் 31ம் தேதி கூடுகிறது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் செவ்வாயன்று கூடுகிறது.

டெல்லியில் செவ்வாயன்று காலை நடைபெற உள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த உள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com