தெலங்கானாவில் பெண்களால் கொண்டாடப்படும் மலர்த் திருவிழாவான பதுக்கம்மா ராஜ்பவனில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. மகாளய அமாவாசை நாளில் தொடங்கி 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பெண்கள் வீட்டையும், தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவார்கள். திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று பெண் ஊழியர்களுடன் இணைந்து ஆளுநர் தமிழிசை பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.