உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவிட்டு வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்த பெண்களை, காரில் பின் தொடர்ந்த இளைஞர்கள் 7 பேர், கேலி செய்தவாறே பின்தொடர்ந்துள்ளனர். கோபமடைந்த வாகன ஓட்டுநர், மது போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களை திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த இளைஞர்கள், வாகனத்தை மறித்து நிறுத்தி ஓட்டுனரை தாக்கியுள்ளனர். சப்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், விபரத்தை அறிந்து இளைஞர்களை பிடிக்க முற்பட்டபோது, 4 பேர் காரில் தப்பிச் சென்றனர்.