"திருக்கோயில்களில் இருந்து அர்ச்சகர்கள் வெளியேற்றப்படவில்லை" - அமைச்சர் சேகர் பாபு

"திருக்கோயில்களில் இருந்து அர்ச்சகர்கள் வெளியேற்றப்படவில்லை" - அமைச்சர் சேகர் பாபு
"திருக்கோயில்களில் இருந்து அர்ச்சகர்கள் வெளியேற்றப்படவில்லை" - அமைச்சர் சேகர் பாபு

பட்டாச்சாரியர்கள், அர்ச்சகர்கள் என யாரையும் திருக்கோயில்களில் இருந்து வெளியேற்றவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சீர்கெட்டு சிதிலமடைந்த இந்து சமய அறநிலையத்துறையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகம விதிகளின்படி முறையாக தேர்வு நடத்தி அதில் தேர்ச்சிபெற்ற அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த 58 பேரை, அர்ச்சகர்கள் இரண்டாம் நிலையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு பணியில் அமர்த்தி கடந்த 14-ஆம் தேதி ஆணை வழங்கப்பட்டது. இதுதொடர்பாக சிலர் விமர்சனம் தெரிவித்த நிலையில், பட்டாச்சாரியர்கள், அர்ச்சகர்கள் என யாரும் திருக்கோயில்களில் இருந்து வெளியேற்றப்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

மேலும், புதிதாக பணியமர்த்தபட்ட இடங்களில் கூட ஏற்கெனவே பணியில் வயது மூப்பின் காரணமாக பணியாற்றி வருபவர்களையும் அந்தந்த இடங்களிலேயே பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com