தமிழக அரசியலில் மாற்றத்தை தரலாமா என மக்கள் எண்ணும் சூழல் தற்போது உருவாகியிருப்பதாக சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அவருடன் 'புதிய தலைமுறை' செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலின்போது கூறுகையில், தேர்தலில் போட்டியிட்டால் மற்ற தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள முடியாது எனவும் எனவே பரப்புரை மேற்கொள்வதற்காக தாம் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் மக்களை சந்தித்து வாக்குகளை பெற பரப்புரை செய்ய வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.