சென்னை: துபாய்க்கு கடத்தப்பட இருந்த ரூ. 5.76 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல்

சென்னை: துபாய்க்கு கடத்தப்பட இருந்த ரூ. 5.76 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல்
சென்னை: துபாய்க்கு கடத்தப்பட இருந்த ரூ. 5.76 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல்

டிராலி சூட்கேசின் கைப்பிடியில் மறைத்து வைத்து சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்தப்பட இருந்த 5 கோடியே 76 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரங்களை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று சென்னையில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் இ.கே.543 புறப்பட இருந்த நிலையில், அதில் வைரம் கடத்தப்படுவது குறித்து சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஒருவரை இடைமறித்து அவரது சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதன் கைப்பிடியில் மறைத்து கடத்தப்பட இருந்த வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்ட வைரத்தின் மதிப்பு 5 கோடியே 76 லட்ச ரூபாய் என்றும் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com