வல்லநாடு வனப்பகுதியில் கொட்டப்படும் கண்ணாடி கழிவுகள்! வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதயில் கொட்டப்பட்டுள்ள கண்ணாடி கழிவுகளால் வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வல்லநாடு மலைப்பகுதியில் மான்கள் சரணாலயம் உள்ளது. வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மான்கள் சரணாலயத்தில் வெளி மான்கள், புள்ளி மான்கள், கிடா மான்கள் மற்றும் பல வகையான வன விலங்குகளும் உள்ளன. பரந்து விரிந்த இந்த சரணாலய பகுதிகளில் கண்ணாடி கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள வன விலங்குகள் கடுமையான பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com