தூத்துக்குடியில் தரைதட்டிய பார்ஜ் கப்பல் 3 விசை படகுகள் மூலம் மீட்பு

தூத்துக்குடியில் தரைதட்டிய பார்ஜ் கப்பல் 3 விசை படகுகள் மூலம் மீட்பு

தூத்துக்குடியில் தரைதட்டிய பார்ஜ் கப்பல் 3 விசை படகுகள் மூலம் மீட்பு
Published on

தூத்துக்குடியில் தரைதட்டிய 'பார்ஜ் கப்பல்' 3 விசை படகுகள் மூலம் மீட்கப்பட்டு, தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு, கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு ஜல்லி, பாறை கற்கள் போன்ற சரக்குகளை கொண்டு செல்வதற்காக 'பார்ஜ்' எனப்படும் பெரிய வகை கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இது சுமார் ஆயிரக்கணக்கான டன் எடையுள்ளது. இது நேற்று மாலத்தீவில் சரக்குகளை இறக்கிவிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அருகாமையில் வந்தது. பின் இழுவை கப்பலின் மூலம் துறைமுகத்திற்கு உள்ளே இழுத்துக் கொண்டு வரும் போது கடல் சீற்றத்தாலும் அதிக காற்று வீசியதாலும் பார்ஜில் கட்டியிருக்கும் கயிறு அறுந்து விழுந்தது.

இதனால் காற்றின் போக்கில் இழுத்து செல்லப்பட்ட பார்ஜி கப்பல், தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அருகே உள்ள இனிகோ நகர் பகுதியில் நேற்று தரை தட்டியது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 3 மீன்பிடி விசைப் படகுகளின் மூலம் கயிறுகளை கட்டி சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் பெரிய வகை பார்ஜ் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் பழைய துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அப்பகுதி மீனவ பெண்கள் கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com